12,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் கூகுள் – முழு பொறுப்பு ஏற்பதாக சுந்தர் பிச்சை அறிவிப்பு

5

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் ஊழியர்கள் இதன்மூலம் வேலை இழக்கின்றனர். இது கூகுளின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும்.

பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சார்பில் சம்பந்தப்பட்ட 12,000 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் பிளாக் பக்கத்தில் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ள தகவலில், "உங்களிடம் பகிர்ந்துகொள்ள சில கடினமான செய்திகள் உள்ளன. கூகுள் நிறுவன பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம். வேலையை இழக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஏற்கனவே தனிபட்ட வகையில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் பணிபுரியும் கூகுள் ஊழியர்கள் இதன்மூலம் வேலை இழக்கின்றனர்.

 

செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.