Advertisement
சாத்தூர்: வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுக்காக நிலத்தை அளவிடும் பணி நடைபெறுகிறது.
வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் மேட்டுக்காட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இங்கு இரும்பு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. மேலும், நுண் கற்காலக் கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடுமண்ணாலான காதணிகள், பொம்மைகள் உள்பட 1,300-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுக்காக நிலத்தை அளவிடும் பணி நடைபெறுகிறது.
Author: செய்திப்பிரிவு
Advertisement