விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் – ஆயத்த பணிகளை தொடங்கினார் பழனிசாமி

6

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு விரைவில் வரும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணி களை மாநிலம் முழுவதும் பழனிசாமி தொடங்கியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் உச்ச பதவியாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகள்உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் பொறுப்பு வகித்து வந்தனர்.

நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.