சென்னை: வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வரும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத்தை ட்ரூகாலர் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் ட்ரூகாலர் இதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
ஆன்லைன் வழியே தங்கள் கைவரிசையை காட்டும் மோசடி பேர்வழிகள் குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளத்தின் ஊடாகவும் பயனர்களை அணுகுகின்றனர். அதுவும் அண்மை காலமாக வாட்ஸ்அப் வழியே தொடர்பு கொண்டு மோசடி செய்வது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் வாட்ஸ்அப் மெசேஞ்சரை மாதந்தோறும் 50 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வரும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத்தை ட்ரூகாலர் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் ட்ரூகாலர் இதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
செய்திப்பிரிவு