பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பெங்களூருவில் உள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை வீடு தேடி சென்று சந்தித்தார். அவரை வ‌ரவேற்கும் விதமாக எடியூரப்பா வழங்கிய பூங்கொத்தை ஏற்க மறுத்த மறுத்த அமித் ஷா, அதை எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவிடம் கொடுக்கச் சொல்லி பெற்றுக்கொண்டார்.
கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடிக்கடி அங்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பெங்களூருவில் உள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை வீடு தேடி சென்று சந்தித்தார்.
Author: இரா.வினோத்