ராகுல் காந்தி தகுதி நீக்கம் | புதுவை சட்டப்பேரவையில் வாக்குவாதம்; திமுக, காங்., வெளிநடப்பு

15

புதுச்சேரி: ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டு திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். விவாதம் முழுவதும் பேரவை குறிப்பிலிருந்து இறுதியில் நீக்கப்பட்டது.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி 2 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் அவர் எம்.பி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்வுகளில் இன்று பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோர் ராகுல் படத்துடன், ‘மன்னிப்பு கேட்கமாட்டார், உண்ணாவிரதம்’ என எழுதப்பட்டிருந்த பேனர்களோடு, கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். சட்டப்பேரவை நுழைவுவாயிலில் மத்திய பாஜ அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ராகுல்காந்தி எம்.பி பதவிநீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டு திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Author: செ. ஞானபிரகாஷ்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.