Advertisement
புதுடெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுஎண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 1,300 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த 140 நாட்களில் இது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement