Advertisement
புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 109 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement