சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 27-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, மாநகராட்சி அதிகாரிகளே பட்ஜெட்டை தயாரித்து, வெளியிட்டு வந்தனர். கடந்த ஆண்டு மேயர், துணை மேயர் இருந்தாலும், குறுகிய காலமே இருந்ததால், அதிகாரிகள் தயாரித்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடப்பாண்டு மேயர் ஆர்.பிரியா தலைமையில், மாமன்ற நிலைக் குழுக்கள் மூலம், துறை வாரியான தேவைகள், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோக்கப்பட்டு, மாநகராட்சி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 27-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, மாநகராட்சி அதிகாரிகளே பட்ஜெட்டை தயாரித்து, வெளியிட்டு வந்தனர்.
Author: செய்திப்பிரிவு