மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாழப்பாடி, அவிநாசி உட்பட 10 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்கிறது

11

செங்கல்பட்டு: மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 பேரூராட்சிகள் விரைவில் நகராட்சிக ளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. வரும், 30-ம் தேதி சட்டப்பேரவையில் இதுகுறித்து அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன், அதிக வருவாயுடைய பகுதிகளை நகராட்சிகளாக அறிவிப்பது வழக்கம். மேலும், நகரமயமாக்கலில் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத அம்சமாகும். நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் உள்ளாட்சிகளை, குறிப்பிட்ட காலத்துக்கு பின் தரம் உயர்த்தி, அடுத்த நிலைக்கு மாநில அரசு கொண்டு செல்கிறது.

மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 பேரூராட்சிகள் விரைவில் நகராட்சிக ளாக தரம் உயர்த்தப்படவுள்ளன. வரும், 30-ம் தேதி சட்டப்பேரவையில் இதுகுறித்து அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Author: பெ.ஜேம்ஸ்குமார்


Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.