Advertisement
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே காதலர் தினத்தையொட்டி அங்குள்ள காதலர் கற்களுக்கு கிராம மக்கள் மரியாதை செலுத்தினர்.
மானாமதுரை அருகே அதிகரை விலக்கு பகுதியில் 2 செங்குத்து கற்கள் அருகருகே தூண்கள் போன்று உள்ளன. ஒரு கல் 7 அடி, மற்றொரு கல் 5 அடி உயரம் கொண்டதாக உள்ளன. முற்காலத்தில் ஆடு, மாடு மேய்த்தபோது 2 பேர் காதல் வயப்பட்டு பெற்றோர், உறவினர் எதிர்ப்பால் இறந்து, கல்லாக மாறியதாக அப் பகுதியினர் நம்புகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே காதலர் தினத்தையொட்டி அங்குள்ள காதலர் கற்களுக்கு கிராம மக்கள் மரியாதை செலுத்தினர். மானாமதுரை அருகே அதிகரை விலக்கு பகுதியில் 2 செங்குத்து கற்கள் அருகருகே தூண்கள் போன்று உள்ளன
Authour: செய்திப்பிரிவு
Advertisement