“ஒரு தலைமுறை குடிக்கு அடிமையாவது நம்முடைய நாட்டுக்கே சுமையாகிவிடும்” என்று சொன்ன அண்ணாவின் வழிவந்த திமுக அரசு, 1971-ல், மதுவிலக்கு அமல் சட்டத்தை ஒத்திவைக்க முடிவெடுத்தது. நிதி நிலையைக் காரணம் காட்டி எடுக்கப்பட்ட மிகப் பெரிய முடிவு அது. தனது படங்கள் மூலம், குடிப்பழக்கத்துக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்திக்கொண்டிருந்த எம்ஜிஆரிடமே இந்த முடிவுக்குச் சம்மதத்தைக் கருணாநிதியால் வாங்க முடிந்ததும், நிதி நிலையைக் காரணம் காட்டித்தான். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியபோது, கருணாநிதி முன்வைத்த வாதம், ‘மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை’ என்பதுதான்.
முன்னதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்குவதாக மத்திய அரசு கூறியிருந்தது. அந்த வகையில் தமிழகத்துக்கும் நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியபோது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் அது பொருந்தும் என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது. வேறுவழியின்றி, மதுவிலக்குச் சட்டத்தை ஒத்திவைக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இத்தனைக்கும் அப்போது காங்கிரஸும் திமுகவும் கூட்டணியில் இருந்தன. எனினும், மத்திய அரசின் மேலாதிக்கமே ஓங்கியிருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு அள்ளிக்கொடுக்கும் அமுதசுரபியான டாஸ்மாக் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறது.
வெ.சந்திரமோகன்