Advertisement
புதுடெல்லி: போபால் விஷவாயு கசிவு வழக்கில் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கடந்த 1984-ம் ஆண்டு விஷவாயு கசிவால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். யூனியன் கார்பைட் இந்தியா நிறுவனம் என்ற கெமிக்கல் தொழிற்சாலையில் இந்த பயங்கர விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 1989-ம் ஆண்டு இழப்பீடு வழங்கப்பட்டது.
போபால் விஷவாயு கசிவு வழக்கில் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
Author: செய்திப்பிரிவு
Advertisement