சென்னை: "நிலம் கையகப்படுத்துதல் சட்டம், விவசாய கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு என விவசாயிகள் மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு மறுப்பது, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் நிறுவனங்கள் பாலின் கொழுப்பு அளவைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.47 வரை வழங்குகின்றன. ஆனால், தமிழ்நாடு அரசுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் ரூ.35 முதல் ரூ.44 என்ற மிகக்குறைந்த விலைக்கே பாலை கொள்முதல் செய்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பால் விற்பனை நிறுத்தப் போராட்டத்தில், பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு மறுப்பது, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு