பாஜகவிற்கு எதிராக அணி திரட்டும் ராகுல் – மம்தா, உத்தவ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்கிறார்

8

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இறங்கியுள்ளார். இவர், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக, வலுவான எதிர்கட்சிகள் அணி திரண்டால் தவிர வெல்ல முடியாது என்ற நிலை நிலவுகிறது. இதற்காக, ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் இரு தினங்களுக்கு முன் டெல்லி வந்திருந்தார். அவருடன், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலுவின் மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவும் உடன் இருந்தார். இருவரும் காங்கிரஸின் தலைவர்களான மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இறங்கியுள்ளார். இவர், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

Author: ஆர்.ஷபிமுன்னா

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.