பாகிஸ்தானில் தீவிரமடையும் உணவுத் தட்டுப்பாடு: இலவச கோதுமை வாங்க குவிந்த மக்கள் நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

13

கராச்சி: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ளதால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. இதனால், உணவு, மருந்து உட்பட அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது. இதனால், அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. பால், காய்கறி, சமையல் எரிவாயு, பெட்ரோல் விலை உச்சம் தொட்டுள்ளது. மக்கள் உணவு வாங்கபணம் இல்லாமல் திணறி வருகின்றனர். தற்போது ரமலான் மாதம் என்பதால் உலகெங்கும் முஸ்லிம்கள் நோன்பு நோற்று வருகின்றனர். இதை முன்னிட்டு பாகிஸ்தான் அரசும் சில தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு இலவசமாக கோதுமை விநியோகித்து வருகின்றன. இலவச கோதுமையை வாங்க மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ளதால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. இதனால், உணவு, மருந்து உட்பட அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது. இதனால், அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.