புதுடெல்லி: எதிர்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் இன்று(திங்கள்கிழமை) கூடியது. மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது லண்டன் பேச்சுக்காக ராகுல் காந்தி நாடாளுன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகரின் இருக்கை அருகே வந்து அமளியில் ஈடுபட்டனர். அதேபோல, மாநிலங்களவையிலும் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு குறித்து பியூஸ் கோயல் தெரிவித்த கருத்தால் அமளி ஏற்பட்டது. இதனால் இரண்டு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
எதிர்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
Author: செய்திப்பிரிவு