நீண்ட நாட்களாக சொத்து வரி நிலுவை: கட்டிடத்தின் முன்பு அறிவிப்புப் பலகை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு 

11

சென்னை: சென்னையில் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு முன்பு 'நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தவில்லை' என்று அறிவிப்பு பலகை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், முதன்மையானது சொத்து வரி மற்றும் தொழில் வரியாகும். சென்னையில் உள்ள 13.33 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா 750 கோடி ரூபாய் என 1,500 கோடி ரூபாய் வரை வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மார்ச் 22 ஆம் தேதி வரை ரூ.1,408.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள சொத்துவரியினை வசூலிக்க வருவாய் துறையால் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு முன்பு நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தவில்லை என்று அறிவிப்புப் பலகை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  

Author: கண்ணன் ஜீவானந்தம்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.