வாஷிங்டன்: “நாங்கள் போருக்கு எதிரானவர்கள். மனித உரிமைகளை அடிப்படை உரிமையாக பார்ப்பவர்கள்” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிரப்துல்லாஹியன் அளித்த பேட்டி ஒன்றில், ஈரானில் மாஷா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து பெண்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல், உக்ரைன் போரில் ஈரானின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமிரப்துல்லாஹியன் கூறியது: “ஈரான் மனித உரிமைகளை அடிப்படை உரிமையாக பார்க்கிறது. ஈரானில் பெண்களுக்கு தேவையான அனைத்து சுதந்திரங்களும் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் உள்ளன. இளம்பெண் மாஷா அமினி கண்காணிப்பு காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி மரணம் அடைந்தார். இந்த மரணத்தை பயன்படுத்தி ஈரான் அரசின் சட்டத்தை மாற்ற நினைத்தார்கள். மாஷா அமினிக்கு குரல் எழுப்பிய உலக நாடுகள், ஏன் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட ஷெரின் அபு அக்லேவுக்காக குரல் எழுப்பவில்லை.. இது எனக்கு மர்மமாக உள்ளது.
“நாங்கள் போருக்கு எதிரானவர்கள். மனித உரிமைகளை அடிப்படை உரிமையாக பார்ப்பவர்கள்” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு