சென்னை: தேனி மக்களவைத் தொகுதியில் தனது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், எம்.பி ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
தேனி மக்களவை தொகுதியில் தனது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில்,எம்பி, ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
Author: ஆர்.பாலசரவணக்குமார்