திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பின்போது பொதுமக்களின் செல்போன்களை பறித்து பவுன்சர்கள் அடாவடியில் ஈடுபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் திரைப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் இன்று 18-ம் தேதி) படமாக்கப்பட்டன. இதற்கான படப்பிடிப்பு, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 2 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் குவிந்துள்ளனர். இவர்களது பாதுகாப்புகாக பவுன்சர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தின் படக்காட்சிகளை படம் பிடித்த பொதுமக்களின் செல்போன்களை பறித்து பவுன்சர்கள் அடாவடியில் ஈடுபட்டனர்.
Author: இரா.தினேஷ்குமார்