Advertisement
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 30,000 நெல் மூட்டைகள் குவிந்துள்ளதால் வரும் 31-ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். ரூ.150 வரை கூடுதல் விலை கிடைப்பதால், நெல் மூட்டைகளின் வரத்து தினசரி அதிகரித்து வருகிறது. தினசரி 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் குவிந்துள்ளதால் வரும் 31-ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Author: இரா.தினேஷ்குமார்
Advertisement