சென்னை: தரமணி விஎச்எஸ் மருத்துவமனையில் போதை அடிமை நீக்க மையம் மற்றும் மனநலப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தரமணி ராஜீவ்காந்தி சாலையில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது விஎச்எஸ் மருத்துவமனை (வாலன்டரி ஹெல்த் சர்வீஸஸ்). இங்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் இலவசமாகவும், மற்ற சிகிச்சைகள் குறைந்தகட்டணத்திலும் அளிக்கப்படுகின்றன.
நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மருத்துவமனையின் என்.சங்கர் வளாகத்தில் இடம்பெற்றுள்ள ராஜீவ் மையத்தில் போதை அடிமை நீக்க மையம் மற்றும் மனநலத் துறை ஆகிய பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு 150 கோடி அமெரிக்க டாலர் வர்த்தக மதிப்பைக் கொண்ட சன்மார் குழுமம், ரசாயனம், சிறப்பு வகை ரசாயனம், பொறியியல், உலோகம் மற்றும் கப்பல் என பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது.
Author: செய்திப்பிரிவு