சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 இன்று (மார்ச் 21) தாக்கல் செய்யப்படுகிறது. சரியாக காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் அறிக்கையை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சட்டப்பேரவைக்கு சென்றடைந்தார். இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும்.
இந்த வேளாண் பட்ஜெட்டில் புதிய வேளாண் கல்லூரிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிறு தானிய உற்பத்திக்கு முக்கியத்துவம் தரக்கூடிய புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் பட்ஜெட் தாக்கலாவதை ஒட்டி பல்வேறு விவசாயிகள் சங்கமும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. குறிப்பாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும். நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4000 வழங்க வேண்டும். பாசனக் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டங்களை இன்னும் திறம்பட செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று (மார்ச் 21) தாக்கல் செய்யப்படுகிறது. சரியாக காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
Author: செய்திப்பிரிவு