தமிழகத்தின் இலக்கான 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவோம்: உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் தீர்மானம்

14

சென்னை: தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவோம் என துபாயில் மார்ச் 18 முதல் 20-ம் தேதி வரை நடந்த 9-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் சர்வதேச பொருளாதார உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டை அமைச்சர் துரை முருகன் தொடங்கி வைத்தார். விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.

மாநாட்டின் நிறுவனத் தலைவர் பி.ஆர்.எஸ்.சம்பத் மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினார். அபித் ஜுனைத் வரவேற்றார். கயானா முன்னாள் பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரீசியஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்.மேலும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிரி எம்.சரவணன், தமிழக எம்பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் விஜிபி சந்தோசம் உள்ளிட்ட ஏராளமானோர் கருத்துரை வழங்கினர்.

தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவோம் என துபாயில் மார்ச் 18 முதல் 20-ம் தேதி வரை நடந்த 9-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் சர்வதேச பொருளாதார உச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.