புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை நடைமுறைப்படுத்தியதில் சில நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதும், அதற்கு பிரதிபலானாக ரூ.100 கோடி வரை லஞ்சம் பணம் கைமாறியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட பலருக்கு தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவரை சிபிஐ கைது செய்தது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
Author: செய்திப்பிரிவு