கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.9,805 கோடி மதிப்பில் ஏவுகணை கப்பல்கள் தயாரிக்க ஒப்பந்தம்

14

கொச்சி: ஏவுகணைக் கப்பல்களை ரூ. 9,805கோடி மதிப்பில் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கொச்சி ஷிப்யார்டு நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தை, கேரளாவில் உள்ளகொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் தயாரித்து கொடுத்தது. தற்போது இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக 6 அடுத்த தலைமுறை ஏவுகணைக் கப்பல்களை ரூ.9,805 கோடி மதிப்பில் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கொச்சின் ஷிப்யார்டு கையெழுத்திட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அடுத்த தலைமுறை ஏவுகணைக் கப்பல்கள், அதிகளவிலான ஆயுதங்களை உடைய கப்பலாகவும், எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையிலும், அதிக வேகத்தில் சென்றுஎதிரி இலக்குகளை தாக்கும் திறனுடையதாகவும் இருக்கும். கடல்சார் தாக்குதல் நடவடிக்கைகள், தரைஇலக்குகள், எதிரிகளின் போர்க்கப்பல்களை தாக்குவதற்கும் இந்த கப்பல்களை பயன்படுத்த முடியும். இந்த கப்பல்கள் 2027-ம் ஆண்டு மார்ச் முதல் விநியோகிக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.

ஏவுகணைக் கப்பல்களை ரூ. 9,805கோடி மதிப்பில் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கொச்சி ஷிப்யார்டு நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.