பெங்களூரு: சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கல்வித் தகுதி, நிதி ஆதாரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்வதை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) வழக்கமாக கொண்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அம்மாநில எம்எல்ஏக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 எம்எல்ஏக்களில் 219 பேரின் கல்வித் தகுதி, நிதி ஆதாரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 35 சதவீத எம்எல்ஏக்கள் மீது கடுமையான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் கல்வித் தகுதி, நிதி ஆதாரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்வதை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) வழக்கமாக கொண்டுள்ளது.
Author: இரா.வினோத்