Advertisement
கரூர்: கரூர் அருகே பழமையான வீடு இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (75). இவர் மனைவி லட்சுமி (70). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கந்தசாமி இன்று (மார்ச் 25 ஆம் தேதி) காலையில் வெளியே சென்றுவிட்ட நிலையில், காலை 6.30 மணியளவில் லட்சுமி காபி போடச் சென்றபோது திடீரென்று வீட்டின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.
கரூர் அருகே பழமையான வீடு இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
Author: ஜி.ராதாகிருஷ்ணன்
Advertisement