சென்னை: சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடம், சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. அகலப் பாதை உள்ளிட்டவற்றை திறந்துவைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுரமீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் 5 தளங்களில் அமைந்துள்ள இந்த புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து, சுமார் 3 கோடியாக அதிகரிக்கும்.
சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடம், சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. அகலப் பாதை உள்ளிட்டவற்றை திறந்துவைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னை வருகிறார்.
Author: செய்திப்பிரிவு