கும்பகோணம்: தமிழகத்திலுள்ள நரிக்குறவர் மக்கள் மீது தீண்டாமை கொடுமைப்படுத்துபவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் த.சுந்தரராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலுள்ள தனியார் திரையரங்கில், நரிக்குறவர் மக்கள், திரைப்படம் பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்றபோது, அங்குள்ளவர் உள்ளே விட மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நரிகுறவ மக்களை, அனைவரது முன்பும், அவமரியாதையுடன், தீண்டாமை கொடுமை செய்தவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நரிக்குறவர் மக்கள் மீது தீண்டாமை கடைப்பிடிப்பவர்கள் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
Author: சி.எஸ். ஆறுமுகம்