இலங்கையில் உள்ளாட்சிகள் பதவி காலம் முடிந்தது: ஏப்ரலில் தேர்தல் நடக்காது என தகவல்

6

கொழும்பு:  இலங்கையில் உள்ள 340 உள்ளாட்சிகளில் பதவிக் காலம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 340 உள்ளாட்சிகளுக்கும் இம்மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த போதுமான நிதியை அரசு ஒதுக்கவில்லை என்பதால் மார்ச் 9ம் தேதி தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேர்தல்கள் ஆணையக்குழு தெரிவித்திருந்தது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், விரைவில் 340 உள்ளாட்சிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க இலங்கை உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதையடுத்து, அடுத்த மாதம் 25ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்த ரூ.500 கோடி கேட்டபோது, ரூ.4 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது தேர்தலை நடத்த போதுமானதாக இல்லை என்பதால், கூடுதல் நிதி ஒதுக்கும்படி இலங்கை அரசு அச்சக அதிகாரி, அரசு கரூவூல செயலருக்கு கடிதம் மீண்டும் கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில், இலங்கையின் 340 உள்ளாட்சிகளுக்கான 4 வருட பதவிக் காலம் நேற்று இரவுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் திட்டமிட்டவாறு ஏப்ரல் 25ம் தேதி தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என இலங்கை தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் அரசு கவனம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.