புதுடெல்லி: ஆஸ்கர் விருது வென்ற ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படகுழுவினருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் இன்று (மார்ச் 14) வாழ்த்து தெரிவித்தனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டம் நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கியது. எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தொடர்ந்து நடைபெற்றது. காலையில் அவை நடவடிக்கைத் தொடங்கியதும் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஆஸ்கர் விருதுகள் வென்றதற்காக ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த அங்கீகாரம், நமது இந்திய கலைஞர்களின் பரந்துபட்ட திறமை, மகத்தான படைப்பாற்றல், அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. உலக அளவிலான நமது எழுச்சிக்கான மற்றொரு அம்சம் இது என்று தெரிவித்தார்.
ஆஸ்கர் விருது வென்ற ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படகுழுவினருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையில் இன்று (மார்ச் 14) வாழ்த்து தெரிவித்தனர்.
Author: செய்திப்பிரிவு