சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடரப்பட்டு, ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுகவினர் 12 பேரின் சொத்துபட்டியல் என்று சில விவரங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14-ம் தேதி வெளியிட்டார். இதற்கு, ‘அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இதை செய்ய தவறினால், அண்ணாமலைக்கு எதிராக சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடரப்பட்டு, ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு