அமராவதி: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் 12 எம்எல்ஏக்களை சபாநாயகர் நேற்று சஸ்பெண்ட் செய்தார்.
ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதன் 2-ம் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அவை நடைபெறாதவாறு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கேசவ், நிம்மல ராமாநாயுடு, ஆளும் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ கோடம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி ஆகிய 3 பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதாக சபா நாயகர் தம்மிநேனி சீதாராம் அறிவித்தார்.
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் 12 எம்எல்ஏக்களை சபாநாயகர் நேற்று சஸ்பெண்ட் செய்தார்.
Author: என்.மகேஷ்குமார்