அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கூலி தொழிலாளி கொலை வழக்கில் 3 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதற்காக போலீசார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் முத்துமணி (43). கடந்த ஜனவரி 31-ம் தேதி அருப்புக்கோட்டை புறவழிச் சாலை அருகே உள்ள கிணற்றில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது மனைவி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கூலி தொழிலாளி கொலை வழக்கில் 3 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதற்காக போலீசார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Author: இ.மணிகண்டன்