Advertisement
1950-ம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் நாள், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை இந்திய அரசும், மக்களும் ஏற்றுக்கொண்டு அமல்படுத்திய நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த பெண்கள் பற்றிய குறிப்புகள் வெகுசில தான் உள்ளன. அந்தக் குழுவில் பெண்கள் இருந்ததனால்தான் பெண்களுக்கு பல உரிமைகள் கிடைக்க வழிவகை ஏற்பட்டது.
அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த 389 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள்தான் பெண்கள். அவர்கள் மற்ற உறுப்பினர்களுடன் வாதாடினர், விவாதித்தனர். நேர்மையான ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு சாத்தியமான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்.
அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவில் இருந்த 15 பெண்கள் யார் என தெரியுமா?
நந்தினி வெள்ளைச்சாமி
Advertisement