Advertisement
சென்னை: அதிமுக தொண்டர்களுக்கு எப்போதும், யாரிடமும் பயம் கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜக மாநிலத் தலைவர்அண்ணாமலை ஒரு கருத்தைக் கூறினார். அதற்கு அதிமுக சார்பில் நான் பதில் தெரிவித்தேன்.
திமுக குடும்ப ஆதிக்கம் நிறைந்த கட்சி. ஊழலில் திளைத்து,ஊழலுக்காகவே கலைக்கப்பட்டது திமுக ஆட்சி. அதை எதிர்க்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், கூட்டணியில் உள்ள அதிமுகவை எதிர்க்கக் கூடாது.
Author: செய்திப்பிரிவு
Advertisement